நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 9 மார்ச், 2020

தமிழ் குடும்பத்திற்கு பிரித்தானியாவில் கொரோனாஅவர்களது வீட்டிற்கு சீல்

பிரித்தானியாவின் சவுத்ஹாலில் தமிழ் குடும்பமொன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களது வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ரக்ஸி ஓட்டுனர் ஒருவரின் குடும்பமே கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளது. ரக்ஸி ஓட்டுனர் தொற்றி்கு இலக்காகி, குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த குடும்பத்தின் பிள்ளையொன்று 
பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றிற்கு இலக்காகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குடும்பத்தின் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், தொற்றிற்கு இலக்காகியிருந்தது 
தெரிய வந்தது.
தற்போது அந்த வீடு சீல் வைக்கப்பட்டு, அந்த குடும்பம் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.லண்டன் நகரத்தில் மட்டும் நேற்று 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டது
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக