நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 4 ஜனவரி, 2016

விபத்தில் மூன்று பேர்பலி உயிர் தப்பிய ஒரே ஒரு ஐந்து வயது சிறுமி!!!.

கனடா- சஸ்கற்சுவானில் கார் ஒன்று ஜீப்புடன் மோதிய விபத்தில் ஒரே ஒரு ஐந்து வயது சிறுமி மட்டும் உயிர் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சிறுமி Hyundai Elantra வாகனம் ஒன்றில் 
ஒரு ஆண் ஒரு பெண் மற்றும்
 இரண்டு வயது சிறுவன் ஆகியோருடன் விபத்து நடந்த சமயம் இருந்ததாக ஆர்சிஎம்பி தெரிவித்துள்ளது. ஞாயிற்று கிழமை அதிகாலை நெடுஞ்சாலை 11ல் இந்த வாகனம் ஒரு றாங்லர் ஜீப்பினால் மோதப்பட்டது. ஜீப் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சமயம் இந்த கோர விபத்து நடந்துள்ளது. காரை செலுத்திய 34வயதுடைய மனிதனும் காரில்
 பயணித்த 33வயது
 பெண்ணும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். சிறுவர்கள் இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறுவன் மரணமடைந்து விட்டான். சிறுமி மட்டும் தப்பி விட்டாள். ஜீப்பில் இருந்த 49-வயதுடைய பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு தற்சமயம் பொலிஸ் காவலில்
 வைக்கப்பட்டுள்ளார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக