நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 26 ஜனவரி, 2016

லண்டன் விமானத்தாக்குதலில் இருந்து எப்படி தப்பியது?

அமெரிக்க வர்த்தக மையம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது போன்று பிரித்தானிய நகரங்களில் தாக்குதல் நடத்த 2 விமானிகள் தீட்டிய சதி திட்டத்தை பிரித்தானிய ராயல் விமானப்படையினர் அதிரடியாக முறியடித்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு ஒரு வாரத்திற்கு பிறகு இந்த சதி திட்டம் பிரித்தானியாவில் தீட்டப்பட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டில் உள்ள Schiphol என்ற விமான நிலையத்திலிருந்து 2 பயணிகள் விமானங்கள் புறப்பட்டுள்ளது.
இந்த விமானங்களில் வெளிநாடுகளை சேர்ந்த இருவர் விமானிகளாக செயல்பட்டு வந்துள்ளனர்.
விமானத்தில் ஆபத்து ஏற்பட்டால் பயன்படுத்த கூடிய 121 ரேடியோ வழியாக இரண்டு விமானிகளும் பேசியுள்ளனர்.
இந்த ரேடியோ மூலம் பேசினால், அந்த தகவல்கள் விமான தலைமையகத்திற்கு செல்லாது என தவறாக எண்ணி இருவரும் தாக்குதல் குறித்து பேசியுள்ளனர்.
அரேபிய ரகசிய வார்த்தைகளை பயன்படுத்தி திட்டம் தீட்டியபோது, இவர்களின் உரையாடல் ராயல் விமானப்படையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனே இருவரின் உரையாடலையும் அதிகாரிகள் பதிவு செய்த பிரித்தானிய புலனாய்வு துறையான GCHQ-விற்கு அனுப்பி வைத்தனர்.
இருவரின் மீது சந்தேகம் எழுந்தாலும், அவர்களை தொடர்ந்து விமானத்தை இயக்க அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
ரகசிய வார்த்தைகள் மீது சுமார் 7 மணி நேர ஆய்விற்கு பிறகு இரண்டு விமானிகளும் சதி திட்டம் தீட்டுவது உண்மை தான் என நிரூபனமானது.
இதனை தொடர்ந்து புலனாய்வு துறையினர் மற்றும் பொலிசார் Operation Templer என்ற தாக்குதல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக 
இறங்கினர்.
விமானிகள் பேசியதில் பிரித்தானியாவில் உள்ள London, Bath, Brighton மற்றும் Ipswich ஆகிய 4 நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக இந்த நகரங்கள் முழுவதும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு சுமார் 10,000 பொலிசார் பாதுகாப்பு பணிகளில்
 ஈடுப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய 2 விமானிகளையும் பொலிசார் கைது செய்தனரா அல்லது அவர்கள் பணியை தொடர்ந்து வருகிறார்களா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும், இரண்டு விமானிகள் குறித்து தகவல்களை சேகரித்துள்ள புலனாய்வு அதிகாரிகள் அவர்களை தீவிர கண்காணிப்பில்
 வைத்துள்ளதா
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக