நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

வாழைப்பழப் பெட்டிகளுக்குள் ஜெர்மனியில் சிக்கிய மர்மம்

ஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு சுமார் 28 மில்லியன் டொலர்.
வாழைப் பழங்களிடையே பதுக்கப்பட்ட போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, எங்கு செல்ல வேண்டியது என்பது இதுவரை தெரியவில்லை.
கடந்த ஆண்டு இதே போல அன்னாசிப் பழங்களுக்கு இடையே 109 கிலோகிராம் போதைப்பொருள் பதுக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக