நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 30 நவம்பர், 2021

மியாமில் விமானத்தை இறக்க உதவும் சக்கரத்தில் பதுங்கியிருந்த மர்ம நபர்

விமானத்தின் தரையிறங்கும் கியரில் மர்ம நபர் ஒருவர் பதுங்கிருந்ததும், அவர் அந்த கியரில் வெளியாகும் அதிகப்படியான வெப்பத்தை எவ்வாறு தாங்கினார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் விமானத்தின் தரையிறங்கும் கியரில் மறைந்திருந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் 27-11-2021.அன்று  Guatemala வில் இருந்து மியாமிக்கு சென்றது. காலை 10...

புதன், 17 நவம்பர், 2021

தொடர்மழையால் கனடாவில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

னடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையால் நிலச்சரிவு ஏற்பட்டமையின் காரணமாகப் பலபகுதிகளில் வீதிகள் மூடப்பட்டுள்ளது.அங்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் ஒரு நகர மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.அத்துடன் அப்பகுதியினூடாக செல்லும் எண்ணைக் குழாய்களும் மூடப்பட்டுள்ளனவான்கூவருக்கு வடகிழக்கே உள்ள மெரிட் நகரத்திலேயே அங்கு வசிக்கும் 7100 பேரும் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்குஅழுத்தவும்...

வெள்ளி, 22 அக்டோபர், 2021

அவுஸ்திரேலியாவில் காணாமற்போன சிறுமியைக் கண்டுபிடித்து தருவோருக்கு ஒரு மில்லியன் டொலர்

அவுஸ்திரேலியாவில் காணாமற்போன 4 வயதுச் சிறுமியைக் கண்டுபிடிக்கத் தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வெகுமதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் பொழுதுபோக்கிற்காக முகாமில் தங்கும் இடத்திலிருந்து கிளியோ ஸ்மித் ( Cleo Smith) என்ற அந்தச் சிறுமிசென்ற சனிக்கிழமை (16) கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சிறுமி காணாமல்போன அன்று, கிளியோவின் ( Cleo Smith) தாயார், அன்று காலை 6 மணிக்கு எழுந்தபோது, அவர்கள் தங்கியிருந்த கூடாரம்...

வியாழன், 21 அக்டோபர், 2021

இலங்கைத் தமிழ் குடும்பம் பிரிட்டனால் கடத்தப்படும் நிலையில் நடந்தது என்ன

பிரித்தானியாவில் இருந்து தமிழ் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றது. டாக்டர் நடராஜா முகுந்தன் – வயது 44 ஒரு விஞ்ஞானி ஆவார். இவருடைய மனைவி சர்மிளா. மூன்று பிள்ளைகள். முகுந்தன் புலமை பரிசிலுக்காக 2018 இல் வந்தார். இவரின் மனைவி மருத்துவ பராமரிப்பாளர்.நோயாளியான அம்மாவை பார்க்க 2019 இல் இலங்கைக்கு வந்த முகுந்தன் கைது செய்யப்பட்டு குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார். ஆனால் இவர் ஒருவாறு தப்பி பிரிட்டனுக்கு திரும்பி சென்றார்....

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

கூகுள் விடுத்த எச்சரிக்கை செய்தி தொலைபேசியினை பயன்படுத்துவர்களுக்கு

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த ஆயிரக்கணக்கான செயலிகள், மக்களிடம் தனிப்பட்ட தரவுகளை திருடும் அபாயம் ஏற்பட்டதால் அனைத்தையும் கூகுள் அகற்றியுள்ளது.மேலும் இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்களை சிக்க வைக்க முடியும் மற்றும் மோசடிக்கு ஆளாகலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டது.இந்த செயலிகள் குறித்து கூகுள் (Google) மேற்கொண்ட விசாரணையில் ஆபத்து இருக்கிறது என தெரியவந்ததை அடுத்து, அந்த செயலிகளை கூகுள் தடை செய்துள்ளது.ஆன்ட்ராய்டு சாதனங்களில் (Android...

சனி, 9 அக்டோபர், 2021

தென்னாப்பிரிக்காவுக்கு தமிழகத்திலிருந்து செல்ல முயன்ற இலங்கையர் கைது

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக,  தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி அதில் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம்.இந்நிலையில்...

புதன், 22 செப்டம்பர், 2021

ஸ்பெயினில் காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு

 ஸ்பெயினை சேர்ந்த ஒரு நிறுவனம் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் கருவியை தயாரித்துள்ளது.வெப்பக்காற்றை குளிரூட்டினால் உறைவு மூலம் உருவாகும் நீர் துளிகளை சேகரிக்கும், மின்சாரத்தில் இயங்கும், இந்த கருவியை, அக்வேயர் என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது.இதற்கமைய பஞ்சம் அதிகம் இருக்கும் நமீபியா மற்றும் லெபனானில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் இந்த கருவிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.1990-களில் ஸ்பெயினை வாட்டிய கடுமையான வறட்சி காலத்தில் இந்த...

வியாழன், 16 செப்டம்பர், 2021

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக யாழ் தமிழ் பெண் தேர்வு

யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரத்தினம் தொழிலாளர் கட்சியில் இருந்து போட்டியிட்டார்.அவர், 21 அக்டோபர் 2015 அன்று ஒஸ்லோவின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 14-09-2021-அன்று  நடந்த தேர்தலில் நோர்வே பாராளுமன்ற உறுப்பினராக கம்ஷாஜினி குணரட்னம் தெரிவாகியுள்ளார்.கம்ஷாஜினி...

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

வட்ஸ்அப் நிறுவனம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு செயற்பாடுகள் நிறுத்தம்

எதிர்வரும் 01-11-2021. நவம்பர் மாதம் முதல் 43 வகையான தொலைபேசிகளில் WHATSAPP பயன்படுத்தினவர்களுக்கு அதிர்ச்சி தகவல்43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.உலகின் அதிகளவான ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இருப்பினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அதிக எண்ணிக்கையிலான...

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

நோர்வே நாட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவியின் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு

யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உதவி இரசாயன விரிவுரையாளர் நோர்வே நாட்டின் அழைப்பை ஏற்று ஆராய்ச்சிக்காக அங்கு சென்றுள்ளார்.யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி இராசாயன விரிவுரையாளராக கடைமையாற்றியவர் தான் சுகுமார் – ரவீனா பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் உயர் புள்ளிகளை பெற்று சாதனை புரிந்துள்ளார்.இந்த நிலையில் மாணவி சுகுமார்-ரவீனா நோர்வே நாட்டில் உள்ள அக்டர் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று ஆராய்ச்சிக்காக நோர்வே நாட்டிற்கு சென்றுள்ளார்.மேலும் அக்டர் பல்கலைக்கழகத்துடன்...

சனி, 4 செப்டம்பர், 2021

வெடித்து சிதறிய ஃபயர் ஃபிளை விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட்

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஃபயர் ஃபிளை’ விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட் நடு வானில் வெடித்துச் சிதறியது என விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ருவிட்டரில் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.கலிபோர்னியாவில் உள்ள வன்டன்பெர்க் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ‘ஆல்பா’ என்ற ரொக்கெட், விண்ணுக்கு ஏவப்பட்டு 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளது.DAMIKA 01 கலிபோர்னியா கடல் பகுதியில் பசுப்பிக் பெருங்கடலுக்கு மேலான வான்பரப்பில் இந்த...

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஓமானில் இருக்கும் இலங்கை பெண் பாரிய மனித கடத்தலில் ஈடுபட்டுவந்தார்

ஓமானில் உள்ள இலங்கை பெண் ஒருவர், பாரிய மனித கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.இந்திய உத்தர பிரதேசத்தில் உள்ள காவல்துறையினர், பல நாடுகளில் பரவியிருக்கும் ஒரு, பாரிய மனித கடத்தல் தொடர்பை கண்டுபிடித்துள்ளனர்.இதன்மூலம், ஓமன், கட்டார் போன்ற வளைகுடா நாடுகளில் நல்ல வேதனத்துடன் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 24 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்று பிரஸ் டிரஸ்ட் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்டவர்கள்...

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

இத்தாலியில் வீடொன்று ஒரு யூரோவுக்கு விற்பனை (இலங்கை நாணயம் 232 ரூபா)

இத்தாலியில் வீடொன்று 232 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து 70 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மென்சா என்கிற நகரிலேயே இவ்வாறு ஒரு யூரோவுக்கு (இலங்கை நாணய மதிப்பில் 232 ரூபா) வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன1968 ஆம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பின் மக்கள் மென்சோ நகரில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர். இதனால் மென்சோ நகரத்தில் மக்கள் தொகை கணிசமான அளவு குறைந்துள்ளது.இதையடுத்து...

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கம் விலை சில தினங்களாக குறைந்துவந்த நிலையில் திடீரென மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.அதன்படி சர்வதேச சந்தையில் கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றத்தினை கண்டு வருகின்றதுசர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை.18-08-2021. இன்று 1794.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கடந்த வார இறுதியில் 1763.50 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி முடிவடைந்திருந்தது.இதேவேளை 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று யாழ்ப்பாணத்தில்...

கபூல் விமானத்தில்இருந்து இருவர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து இருவர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான டுவிட்டர் காட்சிகள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில், அது கபூல் விமான நிலையத்திலிருந்து விமானமொன்று உயர எழும்போது, அதிலிருந்து இருவர் தவறுதலாக வீழ்வதை வெளிக்காட்டியுள்ளதுதலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற, காபூலில் அமைந்துள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்...

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

பெரும் ஆபத்தாம் இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி எரிமலை வெடித்ததால்

இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி என்ற எரிமலை அடுத்தடுத்து 7 தடவை வெடித்துள்ளதால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி என்ற ஆபத்தான எரிமலை ஜாவா தீவில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவில் 120 எரிமலைகள் இருக்கின்றன.அதில் இது முக்கியமானதாகும். இந்த எரிமலையில் கடந்த சில நாட்களாக புகை கிளம்பி வந்தது. 08-08-2021.அன்று  திடீரென வெடித்து சிதறியது.அடுத்தடுத்து 7 தடவை எரிமலை லாவா குழம்புகள் வெடித்து வெளியேறின.இதனால் ஒரு...

புதன், 4 ஆகஸ்ட், 2021

செக்க சிவந்த நிலா அமெரிக்க வானில் தோன்றிய அதிசயம்

அமெரிக்காவில் செக்கச் சிவந்த நிறத்தில் தோன்றிய நிலவை அதிகளவிலான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர் வாஷிங்கடனில் உள்ள வானுயர கட்டிங்களுக்கு பின் தோன்றிய நிலா சிவந்த நிறத்தில் காட்சி அளித்தது. முழு நிலவை பார்த்து ரசித்த மக்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்மேலும் ஒரு தரப்பினர் பற்றி எரியும் காட்டுத் தீயை பிரதிபலிக்கும் பிம்பமாக முழு நிலா சிவந்து காட்சியளித்ததாக தெரிவித்தனர். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் &g...

செவ்வாய், 13 ஜூலை, 2021

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1800 டொலர் என்ற வரம்பை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.எதிர்வரும் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 டொலர்களை தாண்டக்கூடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.இதேவேளை, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தால் நாட்டின் தங்கத் தொழில் சரிந்துவிட்டதாக,...

வியாழன், 27 மே, 2021

கொரோனாவால் கத்தாரில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

   கத்தார் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சற்று குறைவடைந்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 881 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளதோடு 1,556 பேர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளார் என பொது சுகாதார அமைச்சகம்27-05-2021., இன்று அறிவித்துள்ளது, இது கத்தார் மாநிலத்தில் மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 68,319 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான  4 மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்...

புதன், 26 மே, 2021

இந்தோனேசியா- ஆஸ்திரேலியா கடல்பகுதியில் ரோந்து நடவடிக்கை

இந்தோனேசிய- ஆஸ்திரேலிய கடல் எல்லையில் ஐந்தாவது ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கையை ஆஸ்திரேலிய எல்லைப்படை, இந்தோனேசிய கடலோர காவல்படை, கடல்சார் மற்றும் மீன்வளக் கண்காணிப்புக்கான இயக்குநரக ஜெனரல், ஆஸ்திரேலிய மீன்வள மேலாண்மை ஆணைக்குழு இணைந்து மேற்கொண்டிருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு முதல், இந்தோனேசியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான கடல் பகுதியில் நிகழக்கூடிய சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் விதமாக OPERATION GANNET எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. “கொரோனா...