நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 31 ஜூலை, 2015

தமிழர்கள் இன்னும் 30 ஆண்டுகளில் என்ன செய்வார்கள்???

புலம்பெயந்து வாழும் எங்களின் (மரணத்துக்கு பின்பு ) இலங்கைத் தொடர்புகள் முற்றாக அழிந்துவிடும் .
ஏனென்றால் நாங்கள் திருமணம் செய்ய பெண் எடுப்பதும், மாப்பிள்ளை எடுப்பதும் எங்களுடன் முடிவடையும், ஊருக்குப் பணம் அனுப்புவதும் எங்களுடன் முடிவடையும், இலங்கைக்கு விடுமுறையில் செல்வதும் எங்களுடன் முடிவடையும்.
அப்பப்பா, அம்மப்பா, அம்மமா, அப்பமா, மாமா, மாமி என்று நேரில் போய் பார்ப்பதும், கோவில் திருவிழாக்களுக்கு போவதும் எங்களுடன் முடிவடையும். எங்கள் ஆயுளுக்கு பின் எங்கள் பிள்ளைகள் ஏன் அங்கு போவாகள்? எம் அடுத்த சந்ததி இங்கே 
வாழ்க்கைத் துணையை தேடிக்கொள்ளும், அங்கு பணம் அனுப்ப அவர்களுக்கு யாரும் இல்லை, போன் கதைக்க யாரும் இல்லை, அவர்கள் அங்கு tour போகும்போது எதாவது ஹோட்டலில் இருந்து நிலாவரை கிணத்தையும், கீரிமலை,சிகிரியா எல்லாத்தையும் ரசித்துவிட்டு ஒரு வேற நாட்டுகாரர் மாதிரி மட்டும் enjoy பண்ணமுடியும்.
அதோடு நிறைய காசும் 1 நாள் விமானபயணம் செய்து அங்கு ஏன் போவார்கள்? அவர்களுக்கு வரும் girl அல்லது boy friend விரும்புவார்களா? என்ன கொடுமை !!!! எங்களுடன் எங்கள் பிறந்த நாடு 
மறக்கப்படுகிறது... இப்போது நாங்கள் மலேசியா,சிங்கப்பூர் வாழ் தமிழரை எப்படி பார்க்கிறோமோ அதைப்போல எங்கள் பேரப்பிள்ளைகள் இனி யாழ்ப்பாணத்தையும் ஒரு தமிழ் இனம் வாழும் இடமா உலகப்படத்தில் காட்டுவார்கள் !!
- ஆக்கம் பிரகாஸ் ... ( தவிர்க்க முடியாத உண்மை )
கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 22 ஜூலை, 2015

பொலிசை மார்பகத்தால் தாக்கிய பெண்னுக்கு சிறை தண்டனை கிடைக்குமா? (காணொளி )

ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தில் பொலிசாரை மார்பகத்தால் தாக்கிய பெண்ணை குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஹாங்காங் நகரில் உள்ள யூன்லாங் பகுதியில் இரட்டை வர்த்தக முறை கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்ததன் காரணமாக நிக் லாய்-யிங் (30) என்ற பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
அப்போது, சான் என்ற பொலிஸ், தன்னிடம் இருந்த கைப்பயை பறிப்பதற்கு பதிலாக வேண்டுமென்றே தனது மார்பகங்களின் மீது கை வத்தார் என லாய் யிங் புகார் தெரிவித்தார்
இதுதொடர்பான வழக்கு ஹாங்காங் நீதிமன்றத்தில் நடந்துவந்ததையடுத்து, வன்முறை தொடர்பாக வெளியான வீடியோவில், பொலிஸ்காரர் அப்பெண்ணின் மார்பகங்களில் கை வைக்கவில்லை, மாறாக அப்பெண்ணே தனது மார்பகங்களால் சானை தாக்கியிருப்பது தெரியவந்தது.
எனவே அவர் கூறிய குற்றச்சாட்டு பொய் என்பதால், இதுவும் ஒரு வித தாக்குதலே என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார், மேலும் அவரை குற்றவாளி எனவும் அறிவித்துள்ளார்.
தற்போது லாய் யிங்கிற்கு தண்டனை எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த மாத இறுதியில் அவருக்கும் சிறைதண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பெண்கள் சாலையில் பயங்கரமாக தாக்கிகொண்ட டனர் (காணொளி )

அயர்லாந்து நாட்டில் பெண்கள் இருவர் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் பெல்பாஸ்ட் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் 14 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் சண்டையில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஒருவர் தலைமுடியை மற்றொருவர் பிடித்து பயங்கரமாக தாக்கிகொண்டனர். இந்த சண்டை முன்னரே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது.
200க்கும் மேற்பட்ட இளைஞர்களும் சிறுமிகளும் அவர்களை சூழ்ந்துகொண்டு ஏளனம் செய்தபடி வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர்.
இவர்கள், சாலையையும் மற்றவர்கள் செல்லமுடியாதபடி ஆக்ரமித்திருந்தனர். இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
மேலும் இது தொடர்பாக இரண்டு சிறுமிகளையும் 37 வயது மதிக்கத்தக்க ஒருவரையும் கைது செய்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அதிர்ஷ்டகார மனிதர்: பணமழையில் நனைந்த அதிசயம் (காணொளி )

கனடாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு லாட்டரியில் நான்கு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் கிடைத்துள்ளதால் அவர் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார்.
கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தை சேர்ந்த பீட்டர் மெக்கேத்தி என்பவர் தான் வேலைபார்க்கும் Amherst Shore என்ற கடையில், தன்னுடன் வேலைபார்க்கும் டயானா மில்லர் என்பவருடன் இணைந்து லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.
அதில் இவருக்கு நான்கு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ளது, டயானா மில்லருக்கு பத்தாயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.
தற்போது இவரை உலகின் அதிர்ஷ்டகார மனிதர் 
என்று அழைக்கின்றனர், ஏனெனில் தனது வாழ்நாளில் இரண்டு முறை இடி, மின்னல் தாக்கியும் உயிர்பிழைத்துள்ள இவருக்கு அடுத்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
மேலும் இவரது மகளும் மின்னல் தாக்கி உயிர்பிழைத்துள்ளார், 
தற்போது இவ்வளவு தொகை இவருக்கு பரிசாக கிடைத்துள்ளதால் தனது பணியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார்.
மேலும், தனக்கு மிகவும் பிடித்த தொழிலான சமையல் மற்றும் மீன்பிடி தொழிலை செய்யப்போவதாக 
கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

விமானங்கள்:மோதச்சென்ற வேளை நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

108 பயணிகளுடன் சென்ற லுப்தான்சா விமானம் நூலிழையில் பயங்கர விபத்திலிருந்து தப்பியுள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா எம்ப்ரேர் இ.ஆர்.ஜே. -195 (Lufthansa Embraer ERJ-195) என்ற விமானம் 108 பயணிகளுடன் முனீச் நகரிலிருந்து போலந்து நாட்டின் வார்சா சென்றது.
அப்போது, வார்சா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வானிலிருந்து உயரத்தை குறைத்து இறங்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது, ஆளில்லா விமானம் ஒன்று லுப்தன்சா 
விமானத்திற்கு எதிரே 100 மீற்றர் தொலைவில் 760 மீற்றர் வேகத்தில் வந்துகொண்டிருந்தது.
இதனால் இரண்டு விமானங்களும் மோதும் நிலை ஏற்பட்டதால்
, லுப்தான்சா விமானி சாதுர்யமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், கட்டுப்பாட்டு அறையுடான தொடர்பை மீறி ஆளில்லா விமானம் பறந்து வந்தது எப்படி என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
50 மீற்றர் உயரத்திற்கு மேல் ஆளில்லா விமானம் பறக்கவிடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் போலந்து நாட்டில் உள்ளது என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 28 மார்ச், 2015

விமானத்தின் துணை விமானியின் வீட்டில்சோதனை???

 
பிரான்சில் விபத்துக்குள்ளான ‘ஜேர்மன்விங்ஸ் விமானத்தை அதன் சக விமானி வேண்டுமென்றே அழித்துள்ளதாக தகவல் வெளியாகி பரப ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவ் விமானி தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விமானியின் பெயர் என் ட்ரியஸ் லுபிட்ஸ் எனவும் அவர் தனிப்பட்ட பிரச்சினைகளால் உள ரீதியான சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
28 வயதான அவர் காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாகி அதிலிருந்து மீள முடியாமல் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லுபிட்ஸின் வீட்டை சோதனையிட்டுள்ள அதிகாரிகள் அவர் தொடர்பில் பல முக்கிய விடயங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவரது கணனி உட்பட பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
லுபிட்ஸின் வீட்டில் முக்கிய ஆதாரமொன்றை கண்டுபிடித்துள்ளதாகவும் அதை ஆராய்ந்து வருவதாகவும் ஆனால் இப்போதைக்கு அது என்ன என்பது தொடர்பில் தற்போது வெளிப்படுத்தப் போவதில்லையெனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவர் மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையிலும் விமானத்தை செலுத்துவதற்கான தகுதியைக் கொண்டிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானியின் தாய் ஒரு பியானோ ஆசிரியை எனவும் , தந்தை ஒரு வர்த்தகர் எனவும் அவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை லுபிட்ஸின் நண்பர்கள் , அயலவர்கள் அவரை நல்லதொரு இளைஞரெனவும் வழமைக்கு முரணான நட த்தை எதனையும் கொண்டிருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய பதிவுகள்:
விமானத்தை அழித்த விமானியும் , அவரது பின்னணியும்
தலிபான் தலைவன் முல்லா பசுல்லா பலி?
ஆபாசப் படம் பார்த்த 3 மூத்த நீதிபதிகளின் பதவி பறிபோனது
எகிப்து கிஸா பிரமிடுகளில் ஆபாச படம் எடுத்த விவகாரம் விசாரணைக்கு!!!
இலங்கைக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம்; எச்சரிக்கிறார் ஐ.நா ஆணையாளர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



ஞாயிறு, 30 நவம்பர், 2014

ராட்சத' ராக்கெட்: ஜிஎஸ்எல்வி ‘மார்க் 3 டிசம்பரில் விண்ணில் ஏவி சோதனை

 ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதள இயக்குநர் பேட்டி
ஸ்ரோ உருவாக்கியுள்ள ஜிஎஸ் எல்வி மார்க் 3 சோதனை ராக்கெட் டிசம்பர் 3-வது வாரத்தில் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சிக்காக ராக்கெட் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான ஆராய்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டு வருகிறது. இதற்கான ஆராய்ச்சி ரூ.13 ஆயிரம் கோடியில் நடந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 சோதனை ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இது டிசம்பரில் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஏவுதள இயக்குநர் எம்.ஒய்.எஸ்.பிரசாத் கூறியதாவது:

3-ம் தலைமுறை ராக்கெட்

விண்வெளிக்கு ராக்கெட்டில் மனிதனை அனுப்புவதற்கான தொழில்நுட்பத்தை நம்நாட்டி லேயே உருவாக்கும் விதமாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 என்ற 3-ம் தலைமுறை ராக்கெட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது ஜிஎஸ்எல்வி மார்க் 3 பரிசோதனை ராக்கெட்டை தயாரித்து வருகிறோம். இந்த பரிசோதனை திட்டத்துக்கு ரூ.140 கோடி செலவிடப்பட்டுள்ளது. 600 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ராக்கெட் கருவிகளுக்கான செலவு மட்டும் ரூ.15 கோடி. இதை டிசம்பர் 3-வது வாரத்தில் விண்ணில் ஏவி பரிசோதிக்க திட்டமிட்டுள்ளோம்.

630 டன் ராட்சத ராக்கெட்

ராக்கெட் 630 டன் எடை கொண்டது. இஸ்ரோ வரலாற்றி லேயே அதிக எடையில் ஏவப்படும் ராக்கெட் இது. வீரர்கள் பயணிப்பதற்கான பரிசோதனை நிலையிலான கலம் (க்ரூ), தனது முழு இலக்கு வரை செல்லாது. புறப்பட்ட 11.40 நிமிடத்தில் அந்தமான் அருகில் விழும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் முழு வெற்றி கிடைக்காவிட்டாலும், இலக்கை நோக்கி பயணிப்பது, கீழே விழும் கலத்தை பத்திரமாக மீட்பது ஆகியவற்றில் நமது தொழில்நுட்பத்தின் வலு தெரியவரும்.

விண்வெளி ஆராய்ச்சிக்கு மனிதனை அனுப்ப மத்திய அரசு தற்போதுவரை அனுமதி அளிக்கவில்லை. மனிதனை அனுப்ப எங்களை முழுமையாக தயார்படுத்திக்கொண்ட பிறகு, அனுமதிக்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு இயக்குநர் பிரசாத் கூறினார்.

கடலில் விழுகிறது கலம்

ஜிஎஸ்எல்வி மார்க் 3 பரிசோதனை ராக்கெட்டில் 3 அடுக்குகளில் எரிபொருள் நிரப்பப் படும். முதல் நிலையில் எஸ்.200 என்ற இரு உருளைகளில் திட எரிபொருள் நிரப்பப்படும். இவை இரண்டும் ஒரே நேரத்தில் 130 விநாடி வரை எரிந்து, ராக்கெட்டில் இருந்து கழன்று கடலில் விழுந்துவிடும். அதற்குள் ராக்கெட் 70 கி.மீ. தூரத்தைக் கடந்திருக்கும்.

113-வது நொடியிலேயே 2-வது அடுக்கில் உள்ள திரவ எரிபொருள் நிரப்பப்பட்ட எல்-110 என்ற உருளை எரியத் தொடங்கும். இது 200-வது விநாடி வரை எரியும். அப்போது ராக்கெட் 126 கி.மீ. சென்றிருக்கும். 3-வது அடுக்கில் நீர்ம நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டிருக்கும். இது எரியாமல் 126-வது கி.மீ. தொலைவில் ராக்கெட்டில் இருந்து கழன்றுவிடும். அதன் பின்னர் ராக்கெட்டில் உள்ள க்ரூ கலம் கீழே விழும். அது 1600 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையை அடையக்கூடும். இதை தடுக்க அலுமினிய பூச்சு கொண்ட சிலிகான் தகடால் மூடியிருக்கிறோம்.

புவி ஈர்ப்பு விசையால் க்ரூ கலம் வேகமாக கீழே விழுவதை தடுக்க 3 அடுக்கில் பாராசூட் பொருத்தப்பட்டிருக்கும். பாராசூட் ஒன்றன் பின் ஒன்றாக விரிந்து, கலம் மெதுவாக அந்தமான் அருகே 160 கி.மீ. தூரத்தில் கடலில் விழும். கடலோர காவல் படை, விமானப் படை உதவியுடன் அது மீட்கப்படும் என்று ராக்கெட் ஏவுதளத்தின் தொழில்நுட்ப அலு வலர்ர்கள் கூறின.