நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 24 பிப்ரவரி, 2016

கடுமையாக பாதிக்கும் :பிரிட்டன் தொழிலதிபர்கள் எச்சரிக்கை

 டேவிட் கேமரூன் தான் மீண்டும் வெற்றி பெற்று வந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து பொது வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படியே, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த பொது வாக்கெடுப்புக்கான நாளாக ஜூன் 23ம் தேதியை 
அவர் நிர்ணயித்தார்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கும் என்று பிரிட்டன் தொழிலதிபர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக பென்சார்,

வோடபோன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் முதலாளிகள் கையெழுப்பமிட்ட கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால், பிரிட்டனில் முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கும் என்று          அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக