நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 31 ஆகஸ்ட், 2013

மனிதத் தலை!பொதியில் வந்த அதிர்ச்சியில் கென்ய பொலிஸார்

கென்யாவில் 2007ஆம் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போதே நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் காவல்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அப்போதைய அரசுக்கு முன் இருந்த முக்கிய சவால்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கென்யாவின் அதிகாரிகள் லஞ்ச ஊழல் மிகுந்தவர்களாக விவரிக்கப்பட்டனர். எனவே, கடந்த வருடம் காவல்துறையில் மாற்றங்களைக்...

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

நாணயத்தின் வீழ்ச்சி: பிரதமர் இன்று விளக்கம்

பாய் மதிப்பு சரிவடைந்து வருவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று விளக்கம் அளிக்கவுள்ளார். மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை காலையில் எழுப்பியபோது, அவையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங், "சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதுபோன்ற சில சர்வதேச விளைவுகளால்...

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

விபசாரம் நடத்தி வந்தவர் பிளாக் என்ற பெயரில் கைது

பிளாக் நடத்துவதாக கூறி அதன் மூலம் விபசாரம் செய்து வந்த சீன அமெரிக்கர் உட்பட 27 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஸூ சார்லஸ் பி சுவான்(வயது 60). இணையத்தில் பிரபலமான ஸூ சார்லசுக்கு, 1.2 கோடி பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பெய்ஜிங் மாவட்டம் சாயோங் என்ற இடத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். குரூப் செக்ஸ் விருந்துகளுக்கு இவர் ஏற்பாடு செய்து விபச்சாரத் தொழிலை நடத்தி வந்ததாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்....

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

முதன் முறையாக விண்வெளியிலிருந்து நிலாவுக்கு விண்கலம்

விண்வெளியிலிருந்து முதன் முறையாக நிலாவுக்கு செயற்கைகோள்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.பூமியின் துணைக்கோளான நிலாவின் வளிமண்டலம் பற்றி இன்னும் முழுமையாக தெரியவரவில்லை. இதனை அறிந்து கொள்ளும் பொருட்டு அடுத்த மாதம் செயற்கைகோளினை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. அதாவது, நிலாவினுடைய மெல்லிய வளிமண்டலத்தின் அமைப்பு மற்றும் வடிவம் பற்றி சிறந்த புகைப்படங்களை எடுக்க கார் அளவிலான ஒரு ஆய்வுக்கருவியை(ரோபோ) உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்வரும்...

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

அம்பலமாக்கியவர் “நான் ஒரு பெண்” அமெரிக்க ரகசியங்களை !!!

அமெரிக்காவின் ராணுவ புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் பிராட்லி மேனிங்(வயது 25).இவர் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய 7 லட்சத்துக்கும் அதிகமான கோப்புகள் மற்றும் போர்க்கள வீடியோ காட்சிகள் உள்ளிட்டவற்றை விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசியமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அமெரிக்க ராணுவ கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில் அமெரிக்காவின்...

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ராணுவ வீரருக்கு 35 ஆண்டு

அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட ரகசிய தகவல்களை விக்கி லீக்ஸ் இணையதளத்துக்கு ரகசியமாக வழங்கியதாக பிராட்லி மேனிங் என்ற 25 வயதான அமெரிக்க ராணுவ வீரர் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் புலனாய்வு பிரிவில் பணியாற்றிய போது அவர் கைது ஆனார். பிராட்லி மேனிங் மீதான வழக்கை விசாரித்த அமெரிக்க ராணுவ கோர்ட்டு, உளவுப்பிரிவு சட்டத்தின்படி அவர் குற்றவாளி என்று கடந்த மாதம் தீர்ப்பு கூறியது. அவருக்கான...

புதன், 21 ஆகஸ்ட், 2013

உணவகத்தில்ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

ஜேர்மனியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டோசன்ஹெய்ம் என்ற சிறிய நகரம் ஒன்றின் உணவகத்தில் நேற்று சொத்து உரிமையாளர்களின் கூட்டம் நடைபெற்றது.அதில் நடுவில் ஏற்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து, கூட்டத்திற்கு வந்த உரிமையாளர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார். துப்பாக்கியுடன் திரும்பிவந்த அந்த நபர், கூட்டத்தில் இருந்த இரண்டு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு இறுதியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து போனார். இந்த சம்பவத்தில் அருகிலிருந்த ஐந்து பேரும் காயமடைந்தனர்....

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

எகிப்திய இராணுவம் எச்சரிக்கை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு

எகிப்தில் ஆட்சி செய்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த மொஹமட் முர்ஸியை ஜெனரல் சிசி கடந்த ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்தார்.சிறை வைக்கப்பட்டுள்ள முர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்தக்கோரி போராட்டத்தில் குதித்துள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது. சில நாட்களாக நடந்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்களை அச்சுறுத்துவதை முஸ்லிம் சகோதர்துதுவ...

ரசாயன ஆயுத பயன்பாடு: ஐ.நா. ஆய்வாளர்கள் நேரில்

சிரிய அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியின் போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி நேரில் ஆய்வு செய்வதற்காக ஐநா ஆய்வாளர்கள் குழு டமாஸ்கஸ் விரைந்தது.20 பேர் கொண்ட ஆய்வு குழுவினர் மற்றும் உதவியாளர்கள் டமாஸ்கஸ் சென்றுள்ளனர். அங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள அவர்கள் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட நிபுணர்களை சந்திக்க மறுத்து விட்டனர். முன்னதாக சிரியாவின் துணை வெளியுறவு அமைச்சர் பைசல் மெக்டாட் செய்தியாளர்களிடம் கூறும்போது,...

பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு மரண தண்டனையை நிறுத்துமாறு

மரண தண்டனையை நிறைவேற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் உத்தரவிட்டுள்ளார்.இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியுடன் கலந்துரையாடும் வரை மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். லக்கர் ஐ ஜாங்கி ஆயுதக் குழுவின் இரண்டு உயர்மட்ட உறுப்பினர்கள் அடுத்த வாரம் தூக்கிடப்படவுள்ளமை குறித்து கலந்துரையாட வேண்டுமென ஆசிப் அலி சர்தாரி, பிரதமருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மனித உரிமைக் குழுக்கள்...

சனி, 17 ஆகஸ்ட், 2013

பிரித்தானியா இலங்கைக்கு மனிதாபிமான உதவி

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை பிரித்தானியா வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2011ம் ஆண்டு முதல் பிரித்தானியாவால், இலங்கைக்கு 20 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் உதவியளிக்கப்பட்டுள்ளது. உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இயற்கை மற்றும் மனிதனினால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கி...

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

புவி வெப்பமயமாவதால் அப்பிள் பழத்தின் இனிப்பும் சுவையும் அதிகரிப்பு!

  உலகம் வெப்பமயமாவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் பருவநிலையும் மாறும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் சில தாவரங்களில் பழத்தில் மாற்றங்கள் நிகழ்வதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பிள் பழத்தை சாப்பிடும் போது ஏற்படும் மொறு மொறு தன்மை மாறி வருவது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அப்பிள் பழத்தில் மிக அதிகமான இனிப்பு சுவை மாற்றத்தையும் காணமுடிகிறது. ஜப்பானை சேர்ந்த நிபுணர்கள் கடந்த 1970 முதல் 2010ம் ஆண்டு வரை ஆப்பிள் பழங்களின்...

சனி, 3 ஆகஸ்ட், 2013

திருமணம் செய்வதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்குமா?

 11 வயது சிறுமி கேள்வி ஏமனை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர்கள் பணத்துக்காக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஏமனில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சிறுமிகளுக்கு, திருமணம் செய்து வைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 11 வயது மதிக்கத்தக்க நடா அல் ஆடல் என்ற சிறுமி, பணத்துக்காக பெற்றோர்கள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து...

வீழ்த்துவோம்இஸ்ரேலை வேரோடு: ஈரான் எச்சரிக்கை

  இஸ்ரேலை வேரோடு வீழ்த்தும் பெரும்புயல் உருவாகிக் கொண்டுள்ளது என ஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் எச்சரித்துள்ளார்.ஈரான் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த ஜுன் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. இதில் ஹசன் ரவுகானி அமோக வெற்றி பெற்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை ஈரானின் புதிய ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்கிறார். இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் தனது ஆதரவாளர்கள் இடையே தனது ஜனாதிபதி அஹமதி நிஜாத் உரையாற்றினார். அவர் மேலும் தெரிவி்க்கையில், ஜியானிய அடிப்படை கொள்கைகளை...