இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை பிரித்தானியா வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2011ம் ஆண்டு முதல் பிரித்தானியாவால், இலங்கைக்கு 20 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் உதவியளிக்கப்பட்டுள்ளது.
உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இயற்கை மற்றும் மனிதனினால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்துள்ள நிலையிலும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றுதல், இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக