ஈரான் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த ஜுன் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது.
இதில் ஹசன் ரவுகானி அமோக வெற்றி பெற்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை ஈரானின் புதிய ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்கிறார்.
இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் தனது ஆதரவாளர்கள் இடையே தனது ஜனாதிபதி அஹமதி நிஜாத் உரையாற்றினார். அவர் மேலும் தெரிவி்க்கையில்,
ஜியானிய அடிப்படை கொள்கைகளை வேரறுக்கக் கூடிய பெரும்புயல் வந்துக் கொண்டிருக்கிறது என ஆண்டவனை சாட்சியாக வைத்து உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இஸ்ரேலுக்கு இந்த பிராந்தியத்தில் இடமே இல்லை.
மத்திய கிழக்கு நாடுகளை பயமுறுத்தி பணிய வைக்க இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
சிரியா மற்றும் எகிப்தில் அரங்கேறி வரும் சம்பவங்களை பார்த்து அந்நாடுகள் மகிழ்ச்சி அடைகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக