நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

ரசாயன ஆயுத பயன்பாடு: ஐ.நா. ஆய்வாளர்கள் நேரில்


சிரிய அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியின் போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி நேரில் ஆய்வு செய்வதற்காக ஐநா ஆய்வாளர்கள் குழு டமாஸ்கஸ் விரைந்தது.
20 பேர் கொண்ட ஆய்வு குழுவினர் மற்றும் உதவியாளர்கள் டமாஸ்கஸ் சென்றுள்ளனர்.
அங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள அவர்கள் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட நிபுணர்களை சந்திக்க மறுத்து விட்டனர்.
முன்னதாக சிரியாவின் துணை வெளியுறவு அமைச்சர் பைசல் மெக்டாட் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஐநா ஆய்வு குழுவுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்.
சிரியாவில் உள்ள கனல்-அசல் நகரின் புறநகர்ப் பகுதியான அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் கடந்த மார்ச் 19 ஆம் தேதி ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக அதிபர் பஷார் ஆசாத் குற்றம் சாட்டி இருந்தார்.
அந்த இடம் மற்றும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள வேறு 2 இடங்களிலும் ஐநா குழுவினர் ஆய்வு நடத்துவார்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக