நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

முதன் முறையாக விண்வெளியிலிருந்து நிலாவுக்கு விண்கலம்


விண்வெளியிலிருந்து முதன் முறையாக நிலாவுக்கு செயற்கைகோள்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
பூமியின் துணைக்கோளான நிலாவின் வளிமண்டலம் பற்றி இன்னும் முழுமையாக தெரியவரவில்லை.
இதனை அறிந்து கொள்ளும் பொருட்டு அடுத்த மாதம் செயற்கைகோளினை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
அதாவது, நிலாவினுடைய மெல்லிய வளிமண்டலத்தின் அமைப்பு மற்றும் வடிவம் பற்றி சிறந்த புகைப்படங்களை எடுக்க கார் அளவிலான ஒரு ஆய்வுக்கருவியை(ரோபோ) உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் 6ம் திகதி அமெரிக்க விமானப்படை ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ள இந்த செயற்கைகோளானது பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு அப்பால் உள்ள நாசாவின் விர்ஜினியா விண்வெளி கடற்கரை ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு நிலாவை சென்றடையும்.
விண்ணிலிருந்து ஒரு விண்கலம் அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விண்கலத்தில் அனுப்பிவைக்கப்படும் ஆய்வுக்கருவியானது நிலாவை சுற்றி வளிமண்டலம் மற்றும் தூசு மண்டலம் பற்றிய விவரமான செய்திகளை அனுப்பும்.
மேலும் அதிநவீன லேசர் கருவிகளுடன் செயல்படும் இந்த ஆய்வுக்கருவியானது பூமியில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்திற்கு அறிய புகைப்படங்களை அனுப்பி வைக்கும்.
இதன் மூலம் சூரிய மண்டலத்திலுள்ள மற்ற கோள்கள், விண்பாறைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக