நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு மரண தண்டனையை நிறுத்துமாறு


மரண தண்டனையை நிறைவேற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியுடன் கலந்துரையாடும் வரை மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
லக்கர் ஐ ஜாங்கி ஆயுதக் குழுவின் இரண்டு உயர்மட்ட உறுப்பினர்கள் அடுத்த வாரம் தூக்கிடப்படவுள்ளமை குறித்து கலந்துரையாட வேண்டுமென ஆசிப் அலி சர்தாரி, பிரதமருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மனித உரிமைக் குழுக்கள் இந்த மரண தண்டனை நிறைவேற்றத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி வருகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மரண தண்டனை மீதான தடையை மீளப் புதுப்பிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச ஜுரர்கள் குழு ஆகியன பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக