நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 21 ஆகஸ்ட், 2013

உணவகத்தில்ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி


ஜேர்மனியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டோசன்ஹெய்ம் என்ற சிறிய நகரம் ஒன்றின் உணவகத்தில் நேற்று சொத்து உரிமையாளர்களின் கூட்டம் நடைபெற்றது.
அதில் நடுவில் ஏற்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து, கூட்டத்திற்கு வந்த உரிமையாளர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் திரும்பிவந்த அந்த நபர், கூட்டத்தில் இருந்த இரண்டு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு இறுதியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து போனார்.
இந்த சம்பவத்தில் அருகிலிருந்த ஐந்து பேரும் காயமடைந்தனர். அதில் சிலருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றபோது, அந்த உணவகத்தில் 20 பேர் இருந்துள்ளனர். காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் ஏதும் சரிவர தெரியவில்லை என காவல்துறையின் தகவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அதிர்ச்சியுற்றுள்ளனர் என்று ஹெய்டல்பெர்கில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக