நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

புவி வெப்பமயமாவதால் அப்பிள் பழத்தின் இனிப்பும் சுவையும் அதிகரிப்பு!


 
உலகம் வெப்பமயமாவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் பருவநிலையும் மாறும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் சில தாவரங்களில் பழத்தில் மாற்றங்கள் நிகழ்வதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பிள் பழத்தை சாப்பிடும் போது ஏற்படும் மொறு மொறு தன்மை மாறி வருவது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அப்பிள் பழத்தில் மிக அதிகமான இனிப்பு சுவை மாற்றத்தையும் காணமுடிகிறது. ஜப்பானை சேர்ந்த நிபுணர்கள் கடந்த 1970 முதல் 2010ம் ஆண்டு வரை ஆப்பிள் பழங்களின் மீது இது குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
அப்பிள் மரங்களில் பூக்கள் பூத்து மலரும் போதும், அவை காயாகும் போதும் வெப்பம் அதிக அளவு தாக்குவதால் இது போன்ற மாற்றங்கள் நிகழ்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர். முந்தைய ஆய்வுகளில் உலகம் வெப்ப மயமாவதால் அப்பிள் மரங்களில் பூக்கள் பூத்து காயாகி பழமாக மாறி அறுவை செய்யும் காலம் மாறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக