நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

வயிற்றில் 50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்

அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் வந்த பெண்ணின் வயிற்றில் 400 கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து அரபு எமிரேட்டுக்கு சொந்தமான ஒரு விமானம் துபாய் வழியாக ஹைதராபாத்துக்கு நேற்று வந்துள்ளது. அதில் பயணித்த மூசா (32) என்ற பெண்ணுக்கு விமானத்தில் வரும்போதே கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹைதராபாத்தில் விமானம் தரையிறங்கியதும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது...

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

எம்மவர் கோன் திரைப்படம் வெளியிடப்படுகிறது (29.08.2015)

கனடா மொன்றியல் எம்மவர் முழு நிளத்திரைப்படம் வெளியாக உள்ளது அதன் அழை தயாரிப்பாளரால் விடப்பட்டுள்ளது அன்பார்ந்த கனடா வாழ் தமிழ் மக்களே Jena K Siva இயக்கிய திரைப்படம் KONN திரையிடல் எதிர்வரும் Saturday August 29th,2015 at 9:00pm at Decari cinema. உங்கள் அனைவரது ஆதரவும் “Konn” திரைப்படத்திற்கு கிடைக்கும் என நம்புகின்றோம்.அந்த அழைப்புக்காணொளியை இங்கே காணலாம் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

புதன், 26 ஆகஸ்ட், 2015

இளவரசராக மாற ஆசைப்பட்ட வாலிபர்: வீதியில் உலா வந்த விநோதம் (காணொளி இணைப்பு)

  அமெரிக்க வாலிபர் ஒருவர், பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜ் போன்று ஆடையணிந்து அதனை காணொளி வடிவில் வெளியிட்டுள்ளார். பிரித்தானிய இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதியினரின் மூத்த மகன் ஜோர்ஜ் ஆவார். ஊடகங்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தது இவர் மட்டுமல்ல, இவர் அணியும் ஆடைகளும் தான். பிரித்தானியாவின் ஜிக்பு என்ற பத்திரிகை, சிறந்த ஆடையணியும் ஆணாக இளவரசர் ஜோர்ஜை 49வது இடத்தில் தெரிவு செய்தது. இந்நிலையில், இவரது ஆடைகளால் கவரப்பட்ட...

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

வாலிபர் நிர்வாணபடுத்தப்பட்டு தாக்கபட்டார்???

மங்களூர் மார்க்கெட்டில் இந்து மத பெண் பெண் ஒருவரிடம்  பேசி கொண்டிருந்த  இஸ்லாமிய வாலிபர் ஒருவர் நிர்வாணபடுத்தப்பட்டு  கைகள் கட்டபட்டு கடுமையாக தாக்கபட்டார்.   சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சமபவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.லோக்கல் டெலிவிஷன் சேனல் இதனை படம் பிடித்தனர்.  வாலிபரை தாக்கிய பஜ்ரங் தள தொண்டர்கள் 14 பேர் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கபட்ட மனிதர் அங்குள்ள ஒரு கடையின் மானேஜர் ஆவார்....

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து???

கிழக்கு சீனாவின் ஷான்டங் மாகாணத்தில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து அங்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹீவண்டாய் கவுண்டியில் உள்ள ரங்சிங் என்ற நிறுனத்திற்குச் சொந்தமானான ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. ரசாயன பொருட்கள் இருந்த கிட்டங்கியில் தீவிபத்து ஏற்பட்டதால் பலத்த சத்ததுடன் ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதாக  கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 20-க்கும் மேற்பட்ட...

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

ஒரே கிராமத்தை சேர்ந்த 2000 மக்கள் இரவில் திடீர் மாயம்:

கனடாவில் அமைந்துள்ள Angikuni Lake என்ற ஏரியின் அருகே, Angikuni என்றழைக்கப்பட்ட கிராமத்தில் வாழ்ந்த 2000 குடியிருப்புவாசிகள் மாயமான சம்பவம் மர்மமாகவே நீடிக்கிறது. Angikuni கிராமத்தில் சுமார் 2000 எஸ்கிமோக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் விலங்கின் தோல்களை விற்று அதன் மூலம் தங்கள் வாழ்வை நடத்தி வந்துள்ளனர். எனவே அவர்கள் விலங்கை வேட்டையாடுவதற்காக வேட்டை நாய்களையும் வளர்த்து வந்துள்ளனர். அந்த கிராமத்தினரிடம் இருந்து விலங்கின் தோல்களை வாங்கி...

பாலியல் சித்ரவதை செய்து குதிரையை குத்தி கொன்ற மர்ம நபர்:???

பிரித்தானிய நாட்டில் பெண் குதிரை ஒன்றை பாலியல் சித்ரவதை செய்து கொடூரமாக குத்தி கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஸ்கொட்லாந்தில் உள்ள அபெர்டீன்ஷைர் நகரை சேர்ந்த சோ ரைட் என்ற பெண்மணி வசித்து வருகிறார். குதிரைகள் மீது அதிக பிரியம் கொண்ட இவர், பிளேஸ் எனப் பெயரிடப்பட்ட ஒரு பெண் குதிரையை கடந்த 18 ஆண்டுகளாக செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 17ம் திகதி இரவு வேளையில், அவரது பண்ணைக்கு நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்...

பயங்கர குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்து கோயிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது. இதில் 15 பேர் பலியாகியுள்ளனர். இதனை பாங்காக் போலீஸாரும், மீட்புப் படையினரும் தெரிவிக்க, அரசு தரப்பும் உறுதி செய்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை 27 என்று வேறு சில அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன, காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்கள் சிலரும் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்று மாலை 6.30 மணியளவில் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும்...

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

மத்திய தரைக்கடல் பகுதியில் கரை ஒதுங்கிய உடல்கள்???

ஐரோப்பா நோக்கி பயணப்பட்ட அகதிகள் குழு ஒன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவர்களில் சிலரது உடல்கள் லிபியா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது பதைபதைக்க வைத்துள்ளது. லிபியாவின் ஜுவாரா பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் பார்ப்பவர்கள் மனதை உலுக்குவதாக மட்டுமின்றி அகதிகள் படும் அவஸ்தைகளை  வெளிச்சமிட்டு காட்டுவதாக உள்ளது. கரை ஒதுங்கிய சில உடல்களில் கடல் அரித்தது போக வெறும் எலும்புகளே காணப்படுகிறது, இருந்தும் அணிந்திருந்த உடைகள்...

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் பப்புவா அருகே மாயமானது

இந்தோனேசியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளது. பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது விமானம் காணாமல் போனதை தேசிய மீட்புக்குழு உறுதி செய்ததாக ரொய்ட்டரில் செய்தி வெளியாகி உள்ளது. விமானத்தின் சமிக்ஞைகளுக்காக காத்திருக்கும் அதேசமயம், அதனை தேடும் பணியையும் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். ட்ரைகானா விமான நிறுவனத்திற்கு சொந்தமான இந்த பயணிகள் விமானம், ஜெயபுராவின் சென்டானி...

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்! அதிக தமிழர்கள் போட்டியிடும் தேர்தல் களம்

கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பலத்த முக்கியத்துவம் பெறப் போகின்றது. 30 புதிய பாராளுமன்றத் தொகுதிகள் இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்தத் தொகுதிகள் 338 ஆக்கப்பட்டிருக்கின்றன. கனடாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தமிழர்கள் இந்த முறை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக மூவரும் லிபரல் கட்சி, கண்சவேட்டிக் கட்சி சார்பாக தலா ஒவ்வொருவரும் போட்டியிடுகின்றனர். இத்தத் தேர்தல் கனடாவில் ஏற்படுத்தப்...

புதன், 12 ஆகஸ்ட், 2015

தீவிரவாதிகளுடன் இணைய முயன்ற புதுமண தம்பதி கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவரவாத இயக்கத்தில் சேரும் திட்டத்துடன் துருக்கி நாட்டிற்கு புறப்பட்டு சென்ற புதுமண தம்பதியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவரவாத இயக்கத்தில் சேர  திட்டமிட்டிருந்தனர். அங்கு சென்றடைவதற்காக முதலில் மிசிசிபி மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் இருந்து துருக்கியில் உள்ள இஸ்தாபுல் நகருக்கு செல்ல டிக்கெட்டுகளை கடந்த வாரம் வாங்கியுள்ளனர். ஸ்தான்புல்...

டொர்செட் நகரத்தின் மேயராக 3 வயது சிறுவன் தேர்வு???

அமெரிக்காவின் வடக்கு மின்னசொட்டா மாகாணத்தின் டொர்செட் நகரத்தின் மேயராக 3 வயது சிறுவன் தேர்வு செய்யப்பட்டுள்ளான். இவனது 6வது சகோதரனும் இதற்கு முன் 2 ஆண்டுகளாக மேயராக இருந்துள்ளானாம்.அமெரிக்க தேர்தல் விதிமுறையின்படி, யார் வேண்டுமானாலும் ஒரு  நகரத்தின் மேயராக போட்டியிடலாம். டொர்செட் நகரத்தில் 22 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நகரத்தின் மேயர் தேர்தல் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்றது. இதில் போட்டியிட்ட 3 வயது சிறுவன் ஜேம்ஸ், நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளான் மேயர்...

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

திடீர் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை தற்காலிமாக நிறுத்தம்

ஜம்முவில்- காஷ்மீர் பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அமர்நாத் யாத்திரை உடனே நிறுத்தப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தில்சமீபத்தில்,  கடும் மழை பெய்து வருகின்றது. பலத்த மழை காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அமர்நாத் யாத்திரை உடனே நிறுத்தப்பட்டது. இந்த நிலச்சரிவு குறித்து, ஜம்மு போக்குவரத்துக் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் கோட்வால் செய்தியாளர்களிடம்...

புதன், 5 ஆகஸ்ட், 2015

காட்டுத்தீயினால் 13 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் !!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், 20 இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். சான்பிரான்சிஸ்கோவில் 90 சதுர மைல் பரப்பில் தீ பரவி  உள்ளது. காற்றும் கடுமையாக வீசி வருகிறது. 9 ஆயிரம் வீரர்கள் நேற்று முன்தினம் முதல், தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 24 வீடுகள்  தீக்கிரையாகின. விக்கி எஸ்ட்ரெல்லா என்பவர் பரவி வரும் காட்டுத்தீ...

கண்ணாடி துண்டுகள் சிறுநீர் கலந்த தண்ணீர் அருந்திய பெண்???

ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த யாஸிதி பெண் ஒருவர் தான் அனுபவித்த துயரங்கள் குறித்து விவரித்துள்ளார். யாஸிதி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினரோடு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இந்நிலையில் அங்கிருந்து தப்பி வந்த அவர் தனது துயரங்கள் குறித்து கூறுகையில், எனது 4 வயது மகனுக்கு வாளை பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொடுத்தனர். பயிற்சி முகாமில் என்ன கற்றுக்கொண்டாய் என்று என் மகனிடம் கேட்கையில்,...

நடுத்தர வயதில் தந்தையானால் இளம் வயதில் மரணம் !!!

சமீபத்தில் பின்லாந்தை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், இளம் வயதில் தந்தையாகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக  தெரியவந்துள்ளது. 25  வயதிற்குள்ளாகவே திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்கள் மற்றவர்களைவிட இளம் வயதில் கணவன், தந்தை மற்றும் குடுமபத்  தலைவர் போன்ற பொறுப்புகளை சுமக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் தங்கள் உடல் நலத்தை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். இது தான்...

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

உங்கள் நாட்டை முதலில் திருத்துங்கள்”:ஒபாமாவிற்கு பதிலடி???

ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்று உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபரான ஒபாமாவிற்கு கென்யா மற்றும் எத்தியோபிய இளைஞர்கள் சூடான கேள்விகள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதிபர் ஒபாமாவின் தந்தை பிறந்த நாடான கென்யாவிற்கு ஒபாமா சில தினங்களுக்கு முன்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து உரை நிகழ்த்தியுள்ளார். ஒபாமாவின் உரையில், ஆப்பிரிக்க மக்கள் மீது தனக்குள்ள அன்பு மற்றும் மனித உரிமைகளை பற்றி ஒபாமா உணர்ச்சிப்பூர்வமாக...