நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 9 அக்டோபர், 2015

ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தால் ஹம் நகரில் அமைக்கபட்ட ஹிந்துமயானம் திறந்து வைக்கப்படும்

ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தால் எதிர்வரும் 01.10.2015 அன்று  முதலாவது ஹம் நகரில் முதலாவது  ஹிந்துமயானம் திறந்து வைக்கப்படும்
ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் தனது தொடர் 
பணியாக ஹம் 
நகரில் ஹிந்துகளுக்கான தனி ஹிந்து மயானம் ஒன்றை அமைத்துள்ளது. இதுவரை காலமும் ஜெர்மனி நாட்டில் இறைபதம் அடையும் ஹிந்துக்களுக்கு இறுதி கிரிகைகளோ அல்லது ஹிந்து முறையிலான 
எந்தவொரு சடங்கும்
 சரியான முறையில் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையாக ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயகுரு அவர்கள் தனது விடாமுயற்சியால் ஹம் மாநகர சபையுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஹம் நகரில் இந்த ஹிந்து மயானத்தை அமைத்துள்ளார்.
இந்த ஹிந்து மயானத்தின் திறப்புவிழா எதிர்வரும் 01.10.2015 அன்று காலை 11.00 மணிக்கு ஹம் நகரபிதா மற்றும் சக அதிகாரிகள் முன்னிலையில் ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயகுரு அவர்களால் திறந்து வைக்கப்படும். அன்பார்ந்த ஹிந்துமக்களே! நாம் பிறந்தோம் இறந்தோம் என்றில்லாமல் நாம் வாழ்கிற காலத்தில் எமது எதிர்கால சந்ததியினருக்கு ஏதாவது 
செய்தாக 
வேண்டும் அப்போது தான் அவர்களுக்கு எமது கலாசார சடங்குமுறைகளை எமது காலத்தின் பின்பாகவும் பின்பற்ற முடியும் என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து ஆலயம் மேற்கொண்டுள்ள இந்த நற்பணிக்கு மென்மேலும் ஒத்துழைப்பு நல்கும் வண்ணம் கேட்டுக்
கொள்கிறோம்.
இந்த திறப்புவிழா வைபவத்தில் அனைவரும் பங்குகொள்ளும் வண்ணம் மிக அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக