நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 21 அக்டோபர், 2015

பொலிசாரால் கனடாவில் தேடப்படும் உயர்மட்ட கடை திருடி!!!

 ரொறொன்ரோ கனடா- பொலிசார் மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் மீது சுவைகொண்ட பெண் ஒருவரை தேடிவருகின்றனர். ரொறொன்ரோ யோர்க்டேல் மோலில் அமைந்துள்ள ஜிம்மி சூ என்ற கடையை 
இரண்டொரு
 நாட்கள் இடைவெளியில் இலக்கு வைத்ததை பாதுகாப்பு கமராவில் பதியப்பட்ட காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 11மணியளவில் 2,300டொலர்கள் பெறுமதியுள்ள ஒரு பர்ஸ் திருடப்பட்டுள்ளது. மீண்டும் திங்கள்கிழமை பிற்பகலிற்கு
 சிறிது முன்பாக 
1,500டொலர்கள் பெறுமதியான சிறு தோல்பை களவாடப்பட்டுள்ளது. இப்பெண் 35முதல் 45வயதிற்குட்பட்ட நடுத்தர தோற்றமுடைய கறுப்பு முடி கொண்டவர் என விபரிக்கப்பட்டுள்ளது. கறுத்த சேர்ட் நீல காற்சட்டை மற்றும் ஒரு வெண்மை கலந்த பழுப்பு கோர்ட் அணிந்திருந்தார் 
என கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக