நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 20 அக்டோபர், 2015

சிலை ஒன்றை இந்தியாவிடம் சிங்கப்பூர்ஒப்படைக்கும் அருங்காட்சியகம்.

சிங்கப்பூரின் அருங்காட்சியகம் ஒன்று தம்மிடமுள்ள பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை ஒன்றை இந்தியாவிடம் ஒப்படைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.இந்தச் சிலை இந்தியாவிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று தாம் உணர்வதால் அதைச்
 செய்வதாக
 அவ்வருங்காட்சியகம் கூறுகிறது.இந்துப் பெண் தெய்வம் ஒன்றின் இந்த வெண்கலச் சிலையை எட்டு ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கைச் சேர்ந்த ஆர்ட் ஒஃப் த பாஸ்ட் கலைப்பொருள் வணிக நிறுவனத்திடம்
 இருந்து
 சிங்கப்பூரின் ஆசிய நாகரிகங்கள் அருங்காட்சியகம் அறுபத்தையாயிரம் டாலருக்கு வாங்கியிருந்தது.தமிழ்நாட்டின் சிவன் கோயில் ஒன்றிலிருந்து இந்த சிலை முறைகேடாக எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.கலைப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்தியது பற்றிய விசாரணை ஒன்று தற்போது அந்த கலைப்பொருள் வணிக நிறுவனத்தின் மீது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக