நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 19 டிசம்பர், 2019

பேஸ்புக்இருப்பிட அமைப்புகள் முடக்கப்பட்டிருந்தாலும் பயனாளர்களைக் கண்காணிப்பதை ஒப்புக்கொண்டது

பயனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின்தொடரக் கூடாது என்று தேர்வு செய்து வைத்திருந்தாலும், பேஸ்புக்கால் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என அந்நிறுவனமே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனாளர்கள் இதில் பகிர்ந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் CCPA என்ற சட்டத்தின் படி சமூக வலைதளங்கள் பயனர்களிடமிருந்து  என்னென்ன...

வானில் பறந்து சென்ற விமானத்தில் பெண் செய்த செயல் அச்சத்தில் பயணிகள்

துருக்கியில் விமானத்திற்குள் இருந்த பெண் ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்கச் செய்யப்போவதாக கூறி பீதியைத் தூண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கென் விமான நிலையத்திலிருந்து துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸில் உள்ள எர்கன் சர்வதேச விமான நிலையத்திற்கு  புறப்பட் விமானம் தயராக இருந்தது. அப்போது, விமானத்திற்குள் கருப்பு கண்ணாடி மற்றும் நீல நிற முக்காடு அணிந்திருந்து பெண் ஸ்ரீ, தான் FETO இயக்கத்தைச் சேர்ந்தவர்...

செவ்வாய், 17 டிசம்பர், 2019

ஆழ்கடலில் கடலுக்குள் மூழ்கிய வீரருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விசித்திர மிருகம்

பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கிய வீரரை சீல் எனப்படும் கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காண்பது பலருக்கும் பிடித்தமான செயல்  எனலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் கண்டிராத அரிய வகை உயிரினங்களும் நம் கண்களை  கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண மீன்களும் இருக்கும். அதே நேரத்தில்...

வெள்ளி, 13 டிசம்பர், 2019

இலங்கைப் பெண் இத்தாலி இளைஞனை ஏமாற்றி செய்த மோசடி

இத்தாலியில் தொழில் செய்யும் இளைஞர் ஒருவரை பேஸ்புக் மூலம் ஏமாற்றி, 35 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கம்பளையை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்  கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து இரண்டு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ்...

அவுஸ்திரேலியாவில் நடந்த உயர் பரீட்சையினல் சாதனை படைத்த ஈழத்து தமிழ் மாணவி

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா,  மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ் மொழியில் இவ்வாறானதொரு சாதனையை நிகழ்த்தியமை தொடர்பில் பலரும்  பாராட்டுக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.அவுஸ்திரேலியாவில், 21 வருடகால தமிழ்...

செவ்வாய், 10 டிசம்பர், 2019

இராணுவ விமானம் நடுவானில் மாயம்!!…தீவிர தேடுதலில் விமானப் படை

சிலியிலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம் ஒன்று 38 பேருடன் மயமானதாக அந்நாட்டு விமானப் படை தெரிவித்துள்ளது.இதுகுறித்து சிலி விமான படை தரப்பில் வெளியான அறிக்கையில், “சி – 130 ஹெர்குலஸ் இராணுவ விமானம் சிலியின் புண்டா  அரேனாஸ்லிருந்து பிற்பகல் 4. 45 மணியளவில் புறப்பட்டு அண்டார்டிகாவுக்கு செல்லும் வழிதடத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனைத் தொடர்ந்து, விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான இராணுவ விமானத்தில் 38 பேர் இருந்தனர். இதில்...

திங்கள், 9 டிசம்பர், 2019

கைநழுவிப் போன ரஷ்யாவின் உலகக் கிண்ண, ஒலிம்பிக் கனவு

2020 ஒலிம்பிக், 2022 பீபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை வாடா (Wada)எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விதித்துள்ளது.சுவிட்சர்லாந்தின் லொசேன்  நகரில் நடத்த வாடாவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த வாடாவின் இந்த முடிவினை நடுவர் மேன் முறையீடு நீதிமன்றம் மூலம் மேல் முறையீடு செய்வதற்கு 21 நாள் அவகாசமும் ராஷ்யாவுக்கு...

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ரஷ்யாவில் பருவநிலை மாற்றத்தினால் கிராமத்திற்குள் நுழைந்த பனிக்கரடிகள்

ரஷ்யாவில் பருவநிலை மாற்றத்தால் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் 50இற்க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள ரிர்காப்பி கிராமத்தில் அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து  செய்யப்பட்டுள்ளதோடு, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், பொது இடங்கள் குடியிருப்பு வாசிகளைக் கரடிகள் தாக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ரிர்காப்பியில்...

ஞாயிறு, 24 நவம்பர், 2019

நடைப்பயிற்சிக்கு நாயுடன் சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

காட்டுப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்றகொண்டிருந்த ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணை நாய்கள் கடித்து கொன்றுள்ளதாக அவரது கணவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.பாரிஸிலில் ரெட்ஸ் வனப்பகுதியில் எலிசா பிலாஸ்கி என்ற 29 வயதுடைய 6 மாத  கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு தனது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.அப்போது சில நாய்கள் அவரை சூழ்ந்து அவரை தாக்க முற்படுவதாக கணவருக்கு  தொலைப்பேசி வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார். அந்நிலையில், விமான நிலையத்தில்...

வெள்ளி, 8 நவம்பர், 2019

நடந்த கார் விபத்தில் அமெரிக்காவில் பரிதாபமாக பலியான யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு  உயிரிழந்தவராவார்.குறித்த இளைஞர் கடந்த  சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2018-ம் ஆண்டில்  அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது. இங்கு அழுத்தவும்...

செவ்வாய், 5 நவம்பர், 2019

கனடாவில் நடந்த பாரிய கார்த் திருட்டு வசமாக மாட்டிய ஈழத்து தமிழர்கள்

கனடாவில் பெரும் கார்த்திருட்டில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர்.விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்து  செல்ல முயன்றபோது,  வாகனத்தின் உரிமையாளர் பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து, இரண்டு தமிழ் இளைஞர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் எமகாதக  திருட்டில் ஈடுபட்ட  விடயம் அம்பலமானது.நமது ஊர்களில் சங்கக்கடைகளில் நிவாரணத்திற்கு...

புதன், 23 அக்டோபர், 2019

பேரதிர்ச்சி தரும் செய்தி உலக மக்களின் மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு மூடுவிழா

சர்வதேச ரீதியாக பலரின் அறிவுப்பசிக்கு ஊட்டமாகவும், ஈடற்ற ஞானத்தை அளிக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா விரைவில் ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது.அரிய பல தகவல்களை  தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால், தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.வரலாற்றுக் காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய...

திங்கள், 14 அக்டோபர், 2019

ஈழத்தமிழன் கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப்பொறுப்பேற்பு

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.   #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின், 3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா  கனடாவில் குடியேறினார். கடந்த 25 ஆண்டுகளாக கனேடிய பொலிஸ் சேவையில் குற்றப்பிரிவு, போதை தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிஷான் துறையப்பா பணியாற்றி வந்தார். ஹால்டன்...

கனடாவில் சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.  யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது. அத்துடன் இப் போட்டில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் இலங்கையில் இருந்து தெரிவாகிய ஒரே தமிழர்...

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில்லண்டனில் தீ பிடித்த கடைகள்

லண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.   செல்போர்ண் வீதியில் அமைந்துள்ள குறித்த வணிக அங்காடியில் இன்று காலை 7.40 அளவில் ஏற்பட்ட தீ விரைவாக பரவியதால்  பெரும் விபத்தாக மாறியது. இதனை அடுத்து 25 தீயணைப்பு இயந்திரங்களுடன்...

புதன், 17 ஜூலை, 2019

உலக சாதனை படைத்த பிரித்தானியாவில் யாழ்ப்பாண யுவதி

பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி ஷிவலிங்கம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரு போட்டியில் தனி நபராக 76 கோல்களை பெற்று இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இம்முறை உலகக்கிண்ண...

வியாழன், 4 ஜூலை, 2019

பிரான்ஸ் நாடு பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்துள்ளது

பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது. பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை. பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்  உறுதியளிக்கவேண்டும். பிராண்ஸில் தற்போது 85 விழுக்காட்டுப் பெற்றோர்கள் பிள்ளைகளை அடித்து வளர்ப்பதாகக் கறப்படுகிறது. தடை விதிப்பதன்மூலம் நிலைமையை மாற்றியமைப்பது  அரசாங்கத்தின்...

செவ்வாய், 2 ஜூலை, 2019

சிட்னி புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் Bonnyrigg உள்ள அவசர பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு  வரவழைக்கப்பட்டனர். 32 வயதான நபரின் தலையில் துப்பாக்கி பிரயோகம்...

வெள்ளி, 14 ஜூன், 2019

தடுப்பு முகாமிலிருக்கும் ஈழ அகதியின் பரிதாபமான வேண்டுகோள்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாகதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர் தன்னை விடுதலை செய்து பிரிட்டனில் உள்ள சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் .2013 முதல் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.பிரிட்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன்  இணைவதற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சு...

செவ்வாய், 11 ஜூன், 2019

உலகில் அதிக திருமணம் செய்து சாதனை படைத்த கல்யாண மன்னன்

உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்டவர் என்ற பெயருக்கு கலிபோர்னியாவில் வசித்த கிளையன் உல்ப் என்பவர்  சொந்தக்காரராக உள்ளார்.1908ம் ஆண்டு பிறந்த கிளையன் 1997ம்  ஆண்டு உயிரிழந்தார். கின்னஸ் சாதனை புத்தகத்தின் தகவல்படி கிளையன் 29 பெண்களை தனித்தனியாக திருமணம்  செய்து உள்ளார் . கிளையனுக்கு 40க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர்.இவரின் முதல் மனைவி பெயர் மார்கி மெக்டொனால்ட். இவரை  கிளையன் 1926ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ....

புதன், 5 ஜூன், 2019

தாய், மகள் பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு வழக்கு

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும்  நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 1.24 கோடி) வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். மாசுபாட்டை தடுக்க அரசு எந்தவித பாதுகாப் பு நடவடிக்கையும்  எடுக்கவில்லை,...

அவுஸ்திரேலியா 20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளது

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த   படகை கடந்தவாரம் தடுத்துநிறுத்தி அதிலிருந்தவர்களை நாடு கடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்து சமுத்திர பகுதியில் குறிப்பிட்ட படகு கண்டுபிடிக்கப்பட்டது அதில் குழந்தையொன்று...

இனி பேஸ்புக் பயன்படுத்தினாலே அமெரிக்கா செல்ல முடியும்

அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை விண்ணப்பதார்கள் சமர்பிக்க வேண்டுமெ ன தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நடவடிக்கையினூடாக 14.7 மில்லயன் மக்கள் பாதிப்படைவார்கள் என அந்த நாட்டு...

வெள்ளி, 31 மே, 2019

சிறுவனுக்காக விமானத்தில் பறந்து வந்து இன்ப அதிர்ச்சி

தெருவிளக்கில் படித்த பெரு நாட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் விக்டர் மார்ட்டின். வறுமையான குடும்பத்தில் பிறந்த விகிப்பில் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிறந்த மாணவராக இருந்துள்ளார். இந்நிலையில் சிறிய வீட்டில் வசித்துவந்த அவர் வீட்டில் மின்சார  வசதி இல்லாத நிலையில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் நாள்தோறும் தனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள தெருவிளக்கிற்கு கீழே அமர்ந்து படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் தெருவிளக்கில்...

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

பாரிஸ் நகரில் 850 ஆண்டு பழமையான தேவாலயம் தீ விபத்து

பாரிஸ் நகரில் 850 ஆண்டு பழமையான  உள்ள நோட்ரே டேம் கேதட்ரல் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  15,04,2019, மாலை 5.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  தீயணைப்புப்படையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  உலகிலேயே ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் உதாரணமாகத்...

திங்கள், 15 ஏப்ரல், 2019

மீண்டும் இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பாலு நகரத்திலிருந்து வெகு தூரத்தில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால்...