நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 7 மார்ச், 2019

சீனாவில் இரவிலும் ஒளிதர ஆயத்தமாகும் சூரியன்

இந்த ஆண்டின் இறுதிக்குள் சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் செயற்கை சூரியன் ஒளிரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரவிலும் ஒளிதரும் விதத்தில் செயற்கை சூரியனை உருவாக்கும் பணிகளில் சீனா மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின்னர் செயற்கை சூரியனின் உருவாக்கப்பணிகள் நிறைவுபெறும் நிலையிலுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எச்.எல்.2 எம் என்ற அந்த சூரியன் அணு சக்தி மூலம் உயிரூட்டப்படுகிறது. 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை இது வழங்கும் என எதிர்பார்க்கபபடுகின்றது.
இந்த செயற்கை சூரியனின் மையக்கரு எலக்டரான்கள் மற்றும் அயனிகளால் உருவாக்கப்பட்டது.
இதன் ஒளி மூலம் சூரிய சக்தி தகடுகளை சக்தி பெறச்செய்ய முடியும் என சீன அரசு செய்தி இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக