நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 10 மார்ச், 2019

கொலம்பிய விமான விபத்தில் பயணித்த அனைவரும் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் விமானி உட்பட அதில் பயணித்த 12 பேரும் பலியாகியுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரைக்கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்த குறித்த விமானம், வில்லாவிசென்சியோ எனும் நகரத்தின் தென்கிழக்கே 89 கிலோ மீற்றர் தொலைவில்
 விபத்துக்குள்ளாகியுள்ளது.
இறந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் 
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, கடந்த-1930 ஆம் ஆண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்டு வரும் டக்ளஸ் டி.சி-3 எனும் ரகத்தைச் சேர்ந்த மேற்படி விமானத்தில் அதிகபட்சம் 30 பேர் பயணிக்க முடியும் என்பதும் 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக