நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 31 மார்ச், 2019

டாக்கா நகரில் தீ விபத்து இலங்கையர் உட்பட பலர் உடல் கருகி பலி

கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு
 உறுதிப்படுத்தியுள்ளது.
பங்களாதேஷ் டாக்கா நகரில் மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் மேலும் ஒரு இலங்கையர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீயை கட்டுப்படுத்த 17 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தீயில் இருந்து தப்பிக்க அதில் சிக்கியுள்ளவர்கள் கட்டிடத்தில் இருந்து கீழே குதிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள 19 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக