நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 6 மார்ச், 2019

அனுமதிப்பத்திரம் இன்றி 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டிய விமானி

தென்னாப்பிரிக்காவில் பொறியலாளர்ஒருவர் விமானி என ஏமாற்றி 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் வில்லியம் சாண்ட்லர். இவர் தென்னாப்பிரிக்க அரசுக்கு சொந்தமான சவுத்
 ஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் விமானி ஆகப் பணிபுரிந்துள்ளார்.சம்பவத்தன்று தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜேர்மனிக்கு விமானம் பயணம் செய்தது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை தொடருக்கு மேல் பறந்த போது அதிர்வு ஏற்பட்டது.
அப்போது விமானத்தை வினோதமாக இயக்கிய விதம் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவரிடம் விசாரணை
 நடத்தப்பட்டது.அதில் அவர் விமானி இல்லை. அதற்கான அனுமதிபத்திரம் அவர் பெறவில்லை என தெரியவந்தது. இவர் விமானி ஆவதற்கு முன்பு இவர் விமான பொறியலாளர் பணியாற்றியுள்ளார்.
அந்த அனுபவத்தில், அவர் கடந்த 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த தகவல் தெரிய வந்துள்ளது.எனவே, பணி நீக்கம் செய்யப்பட்ட அவரிடம் இருந்து இழப்பீடாக பெரும் தொகையை விமான சேவை நிறுவனம் கோரியுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க போவதாகவும் அறிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக